மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி, மழலையர் வகுப்பு முதல் நடுநிலைப்பள்ளி வரையிலான மாணவர்கள் பயன்பெறும் வகையில் கோடைக்கால சிறப்புப் பயிற்சி வகுப்புகள் 12.03.2018 முதல் 22.03.2018 வரை நடத்தியது. சுமார் ஆயிரத்திற்கும் மேலதிகமான மாணவர்கள் பல்வேறு பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயனடைந்தனர்.
இப்பயிற்சி வகுப்பில் சோதனை விளையாட்டுகள், சிறுவர் திரைப்படக் காட்சி, சதுரங்கம், அபாகஸ் (கணிதம்), தகவல்1 தொடர்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் இனிதே நடைபெற்றன. மாணவர்களின் ஓவியங்கள் மற்றும் கைத்திறன் வேலைப்பாடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டு கண்களுக்கு விருந்தாகின இந்நிகழ்வினைச் சிறப்பிக்கும் வகையில் ஃபெவிக்ரில் நிறுவனத்தின் தலைவர் ஷியாமளா தேசி வருகை தந்து சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்குப் பரிசளித்துப் பாராட்டினார் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment