போஸ்ரா விளையாட்டுக் குழுமம் நடத்திய உள்மாவட்டங்களுககு இடையேயான தடகளப் போட்டி ஆவடியில் உள்ள காவல் நிலைய மைதானத்தில் 24.03.2018 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் 14 வயதிற்குட்பட்டோருக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய முகப்பேர் வேலம்மாள் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி ஆர்.ஏஞ்சலின் சுவேதா திறமையாக விளையாடி வெண்கலப்பதக்கம் வென்று வாதனை படைத்தார். இப்போட்டியில் 70 பள்ளிகளில் இருந்து சுமார் 900 மாணவர்கள் கலந்து கொண்டனர். கடுமயான போட்டிக்கிடையே வெண்கலம் வென்ற மாணவியின் சாதனையைப் பள்ளி நிர்வாகம் பாராட்டியது.
No comments:
Post a Comment