Saturday 6 August 2016

வங்கி கணக்கு இல்லாத ஏடிஎம்மிலும் இனி டெபாசிட் செய்யலாம்

வங்கி கணக்குகள் இல்லாத ஏடிஎம்மிலும் டெபாசிட் செய்யலாம் என்ற திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர், சம்பந்தப்பட்ட வங்கி ஏடிஎம்மில் அல்லாமல் எல்லா வங்கி ஏடிஎம்மிலும் பணம் எடுக்கும் வசதி உள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள்  தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்மில்தான் தங்கள் கணக்கில் பணம் டெபாசிட் செய்ய முடியும் என்ற நிபந்தனை இருந்தது. இனி, எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், வேறு வங்கி ஏடிஎம் மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் வர உள்ளது. 

இத்திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மூன்று வங்கிகளுக்கு இதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி தேசிய பேமன்ட் கார்ப்பொரேஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வேறு வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்வது குறித்து பரிசோதனை முயற்சியாக 3 வங்கிகளில் செயல்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து பரிசோதனை முயற்சி துவங்கும். டெபாசிட்டுக்கு ரூ.10,000 வரை ரூ.25, ரூ.50,000க்கு மேல் ரூ.50 சேவை வரியாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts