Thursday 4 August 2016

நாளை துவங்குகிறது ஒலிம்பிக் போட்டிகள்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2016ம் ஆண்டிற்கான 31 வது ஒலிம்பிக் போட்டிகள் நாளை (ஆகஸ்ட் 5) துவங்க உள்ளது. இதற்காக பிரம்மாண்ட, கண்கவர் துவக்க விழா நடைபெற உள்ளது. ரியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 5 ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 21 ம் தேதி வரையிலான 16 நாட்கள் நடைபெற உள்ளது. 

இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 11,178 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில் இந்தியா சார்பில் 200 பேர் பங்கேற்க உள்ளனர். இந்திய நேரப்படி ஆகஸ்ட் 6 ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பிரேசில் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியை முறைப்படி துவக்கி வைக்க அந்நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts