Monday 8 August 2016

ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் 26-ம் ஆண்டு கூழ்வார்த்தல் விழா

சென்னை ஜெ.ஜெ.நகர் கிழக்கு, முகப்போ; 4-வது பிளாக் வீரமாமுனிவர் சாலை, பச்சையப்பன் சாலை சந்திப்பில் அருள்மிகு ஸ்ரீசெந்தில்வேலவர் சுப்பிரமணியசுவாமி, ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 26-ம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா 12.08.2016 வெள்ளிகிழமை காலை 7-மணியளவில் அனுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வரா ஹோமம் பூஜையுடன் விழா துவங்கப்படுகிறது. மாலை 6-மணியளவில் பதிவிளக்கு பூஜையும், அம்மனுக்கும், பக்தர்களுக்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகளும், இரவு 8 மணியளவில் அன்னதானமும், நடைபெறுகிறது. 13-ம் தேதி சனிக்கிழமை காலை 7-மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும், பகல் 12-மணியளவில் அன்னதானம், நடைபெறுகிறது. 
 
மாலை 6-மணியளவில் அம்மன் வர்ணையுடன் மகா தீபாராதனை பூஜைகளும், இரவு 8-மணியளவில் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. 14-ம் தேதி காலை 7- மணியளவில் ஸ்ரீமுத்துமாரி அம்மனுக்கு தாய் வீட்டு சீதனம் வழங்குதல், 9-மணியளவில் சக்தி கரகம், வீதி உலா வருதல், நண்பகல் 1-மணியளவில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலை 6-மணியளவில் ஸ்ரீமுத்துமாரி அம்மன் சிறப்பு சந்தன காப்பு அலங்காரம், கும்பம் படைத்தல், இரவு 8-மணியளவில் அன்னதானமும், அதைத் தொடர்ந்து ஸ்ரீவலம்புரி விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் உற்சவர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்கள். பின்பு அம்மனுக்கும், பக்தர்களுக்கும் காப்பு களைதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கு  பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொள்ளும்படியும் விழா ஏற்பாடுகள் செய்துவரும் திருக்கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts