Saturday 30 July 2016

நொளம்பூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவைகுந்தநாதபெருமாள் திருகோயிலில் முப்பெரும் விழா

சென்னை ஜெ.ஜெ.நகர் மேற்கு முகப்பேர் அருகேயுள்ள பெரிய நொளம்பூர் வெள்ளாளர் தெருவில் 600 ஆண்டுகள் பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவைகுந்தநாதபெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில், குருபெயர்ச்சி, ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம், ஸ்ரீகருட பஞ்சமி ஆகிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இவ்விழாப் பற்றி திருக்கோயில் நிர்வாகிகள் கூறுகையில்: 02.08.2016 செவ்வாய் கிழமை குருபெயர்ச்சி, மற்றும் அமவாசையை முன்னிட்டு காலை 8.30 மணியளவில் சிறப்பு ஹோமம் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மகாதீபராதனையும், ஸ்ரீசுந்தர காண்டம் பாராயணமும் நடைபெறுகிறது. 
 
05.08.2016 வெள்ளிக்கிழமை ஆடிப்பூரத்தை முன்னிட்டு காலையில் சிறப்பு பூஜைகளும், மாலை 5-மணியளவில மேள தாளங்களுடன், மந்திரங்கள் முழங்க ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண விழாவும் நடைபெறுகிறது. 07.08.2016 ஞாயிறு கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு ஆலயத்தில் அருள்புரிந்து வரும் ஸ்ரீகருடன் சுவாமிக்கு காலை 8.30 மணியளவில் சிறப்பு திருமஞ்சனமும், மகாதீபராதனையும் நடைபெறுகிறது. மூன்று தினங்கள் நடைபெறும் விழாவிற்கு பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமியின் பேரருளை பெறும்படியும், விழாவிற்கு உபயதாரர்கள் வரவேற்க்கப்படுகின்றனர். மேலும் விபரங்களுக்கு 9283119460 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படியும் விழா ஏற்பாடுகளை செய்துவரும் திருக்கோயில் நிலீ;வாகிகள் தொஜீவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts