Saturday 23 April 2011

தொலைதுர கல்வி விண்ணப்பம் விநியோகம்: லயன் எம்.வி.கே.முருகன் தொடங்கி வைத்தார்

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதுர கல்வி இயக்ககம் சார்பில் இளநிலை, முதுநிலை பட்ட வகுப்புகள், பட்டய வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த 2011& 2012ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் விநியோக தொடக்க விழா சென்னை போரூரில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக படிப்பு மையத்தில் நடைபெற்றது.

இதில் வில்லிவாக்கம் அகத்தியர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் லயன் எம்.வி.கே. முருகன் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் போரூர் பெடரல் வங்கி கிளை மேலாளர் சுஜேஷ் முதல் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டார். விழாவில்  துணைப் பேராசிரியர்கள் ஜெ.சிவகுமார், ஜி.ராமச்சந்திரன், சிறப்பு அதிகாரிகள் ஆர்.பாபு, கே.டி.கே. ஞானவேல்குமரன், தொடர்பு அதிகாரி டி.மகேஷ்குமார், கண்காணிப்பாளர் சி.வி.மங்கையர்கரசி, ஒருங்கிணைப்பாளர் சுஜீபிரவீண், ஆய்வக மேலாளர் எஸ்.சுப்பிரமணி, முதுநிலை உதவியாளர் எஸ்.கிருபாசங்கர், என்.ஜவஹர், இளநிலை உதவியாளர்கள் வி.பிரசன்னா, பி.லலிதா மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

 அதை தொடர்ந்து திரளான மாணவ, மாணவிகள் வந்து விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts