Saturday 21 April 2018

சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவன் பிரக்ஞானந்தா முதலிடம்

சர்வதே அளவிலான ஃபோர்த் ஃபிஷ்ஷர் சதுரங்கப் போட்டியில் கிரீஸ் நாட்டில் 09.04.2018 முதல் 17.04.2018 வரை நடைபெற்றது. பத்து நாடுகள் பங்கு பெற்ற இப்போட்டியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளியியன் ஏழாம் வகுப்பு மாணவன் பிரக்ஞானந்தா கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி 9 சுற்றுகளில் 7 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றார். கிராண்ட் மாஸ்ட் தகுதி பெறுவதற்குரிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 3 நிலைகளில் 2 நிலைகளை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரக்ஞானந்தா இம் மாபெரும் சாதனையின் மூலம் முதல் பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் பிரக்ஞானந்தாவின் தற்போதைய ரேட்டிங் 2520 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. சாதனை மணவன் பிரக்ஞானந்தாவை வேலம்மாள் கல்க் குழுமத்தின் தாளாளர் உயர் எம்.வி.எம். வேல்மோகன் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts