Thursday 4 August 2016

ஒற்றை தலைவலிக்கு தீர்வாகும் புதினா டீ

உணவுகளில் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் புதினாவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் இலைகள், ஸ்ட்ராபெரி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதால் விட்டமின் A, B, C  மற்றும் D சத்துக்கள் கிடைக்கின்றன. கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதுடன், வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. செரிமானத்தை சரிசெய்து, கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. முக்கியமாக ஒற்றைத் தலைவலியால் அவதிப்படும் நபர்கள் இதனை பருகலாம்.
தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு
ஸ்ட்ராபெர்ரி இலைகள் - ஒரு கைப்பிடி அளவு
சுடுநீர் - ஒரு கப்
செய்முறை:
புதினா மற்றும் ஸ்ட்ராபெர்ரி இலைகளை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
இதனை சூடான நீரில் போட்டு சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும், நன்கு வடிகட்டிய பின்னர் குடிக்கலாம்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts