Saturday 30 July 2016

பாடிபுதுநகர் ஸ்ரீவரசித்திவிநாயகர் ஆலயத்தில் ஆடி கிருத்திகை 37-வது ஆண்டு ஆடித்திருவிழா

சென்னை ஜெ.ஜெ.நகர் கிழக்கு, முகப்பேர் அருகேயுள்ள பாடிபுதுநகர் பிரதான சாலை 1-வது தெருவில் அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர், அருள்மிகு ஸ்ரீதாய் முகாம்பிகை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆடி கிருத்திகை மற்றும் 37-வது ஆண்டு 3-வது வார கஞ்சி வார்த்தல் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழா பற்றி ஆலய நிர்வாகிகள் கூறுகையில்: ஆலயத்தில் அருள்புரிந்து வரும் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீமுத்துகுமார சுவாமிக்கு ஆடி கிருத்திகை விழா வை முன்னிட்டு 28.7.2016 வியாழன் கிழமை மாலை 5-மணியளவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து திருவீதி உலா வந்து சுவாமியை தரிசனம் செய்தனர். 
 
ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீமுத்துகுமார சுவாமி சிறப்பு ராஜ ஆலங்காரத்தில் பக்தா;களுக்கு காட்சி கொடுத்தார். 29-ம் தேதி வெள்ளிகிழமை மாலை 6-மணியளவில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்று, 30-ம் தேதி சனிக்கிழமை மாலை 4-மணி யளவி ல் ஸ்ரீதாய்முகாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதிஉலா புறப்பாடும், 31-ம் தேதி ஞாயிறு காலை 9-மணியளவில் சிறப்பு அபிஷேகமும், பகல் 12-மணியளவில் கஞ்சி வார்த்தல், மாலை 6-மணி யளவில் அம்மனுக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரமும், இரவு 7-மணி யளவில் கும்ப பூஜைகளும் நடைபெறுவதாகவும் விழாவில் பக்தா;கள் அனைவரும் கலந்து கொள்ளும்படியும், விழா ஏற்பாடுகள் செய்துவரும் ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts