Friday 12 October 2012

இலவச பாடப் புத்தகம், சீருடைகள்: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கினார்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரைப்படி பெரியமெடு சரகத்தின் அனைத்து ஆசிரியர்களுக்குமான ஆய்வுக் கூட்டம் டான்பாஸ்கோ தொடக்கப் பள்ளியில் 03.10.2012 அன்று பிற்பகல் 2 மணிக்கு பெரியமேடு சரக உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பெரியமேடு சரகத்தைச் சேர்ந்த அனைத்து சென்னை தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இரண்டாம் பருவத்திற்கான இலவச பாடப் புத்தகம், பாடக் குறிப்பேடு மற்றும் இலவச சீருடை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் எஸ்.சாந்தி வழங்கினார்.

அவ்வமயம், 25.09.2012 அன்று கல்வித் துறை அமைச்சர், முதன்மைக கல்விச் செயலர் ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தின் முக்கிய அம்சங்களை, அனைத்து ஆசிரியர்களும் பணியை சிறப்பாக செய்வதற்கான வழிமுறைகளாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூறினார்.

மேலும் ஸிஜிணி சட்டத்தின் முக்கிய விதிகள் பற்றி விளக்கிக் கூறினார். அவைகளை அனைவரும் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்கள்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts