Saturday 9 April 2011

திருவள்ளுவர் குடியிருப்பில் 12&ந்தேதி ஸ்ரீ ராமநவமி விழா

அண்ணாநகர் மேற்கு பஸ் நிலையம் எதிரே உள்ள 19&வது மெயின் ரோடு ஐ பிளாக்  யூசிமாஸ் அருகே திருவள்ளுவர் குடியிருப்பில் வருகிற 12&ந்தேதி (செவ்வாய்கிழமை) ஸ்ரீ ராமநவமி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.00 மணிக்கு நகர சங்கீர்த்தனமும், 8.30மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும், பூஜையும், காலை 9.15 மணிக்கு மங்கள ஆரத்தியும் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

அதை தொடர்ந்து காலை 10.00 மணி முதல் 11.00 மணிவரை ராமர் பஜனை பிரபல சாய்பக்தர் சி.வி.ராஜ்பாபு குழுவினரால் நடத்தப்படுகிறது. 11.30 மணிக்கு அன்னதானம் (நாராயணசேவை) வழங்கப்படுகிறது. மாலை 6.00 மணிக்கு குழந்தைகள் பாடும் தெய்வீக பாடல்கள் நிகழ்ச்சியும், மாலை 7.00 மணிக்கு தசாவதாராம் நாட்டிய நாடகமும், இரவு 8.00 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறுகிறது.

அதை தொடர்ந்து விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் எஸ்.ஹேமலதா மிகச்சிறப்பாக செய்து வருகிறார். மேலும் விவரங்களுக்கு வழக்கறிஞர் எஸ்.ஹேமலதா 98401 11120.

No comments:

Post a Comment

Annanagar Daily posts