Tuesday 20 September 2016

ரயில்வேயில் புதிய திட்டம்

நாட்டின் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு இயக்கப்படும் பேட்டரி கார்கள் திட்டமான 'யாத்ரி மித்ர' திட்டத்தை, ரயில்வே அமைச்சகம் விரைவில் துவக்க உள்ளது. ரயில்களில் பயணம் செய்ய விரும்பும் முதியோர், நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ரயில் நிற்கும் நடை மேடை வரை நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். 
இவர்களுக்கு உதவ, முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களில், பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்து, நாட்டின் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில், 'யாத்ரி மித்ர' என்னும் திட்டத்தை, ரயில்வே அமைச்சகம் விரைவில் துவக்க உள்ளது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts