Wednesday 3 August 2016

வேலம்மாள் பள்ளியின் சாரண, சாரணியர் இயக்கத்திற்கான மாபெரும் இராஜபு-ரஸ்கார் முகாம்

மிக உயர்ந்த விருதான இராஜபுரஸ்கார் தேர்விற்கான முகாம் வேலம்மாள் நிறைநிலை மேனிலைப் பள்ளியில் 29.07.2016 அன்று முதல் 31.07.2016 வரை நடைபெற்றது. இதில் 60 பள்ளிகள் பங்கேற்றன. அதிகாலை முதல் மாலை வரை பல்வேறுவிதமான செயல்முறைப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. 850-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிறைவான மனதோடு கூடராம் அமைத்தல், கைவேலைப்பாடுகள், பல்வேறு விதமான முடிச்சுகள் போடுதல், வழித்தடம் உருவாக்குதல் முதலான போட்டிகளில் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர். 
 
முதலுதவிக்கான செயல் முறைப் பயிற்சியும் நடத்தப்பட்டது. இறுதியாக சாரண, சாரணியர் இயக்கத்தின் பொன்னேரி மாவட்டச் செயலாளரான பிரேம்சந்த் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் கங்காதர ரெட்டி அவர்கள் தலைமையேற்று இம்முகாமினை இனிதே நிறைவு செய்தனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts