Tuesday 2 October 2012

பாராட்டு

சென்னை அண்ணா நகர் தமிழ்ப் பேரவைச் செயலாளர் தமிழ் தாத்தா வி.நாகசுந்தரம் அவர்களது ஆன்மீகம், தமிழ்த் தொண்டு மற்றும் சமூகப் பணியினைப் பாராட்டி அரும்பாக்கம் நலநிதியின் மேலாண்மை இயக்குனர் திரு எம். சிவஞானம் அவர்களது தலைமையில் 22.09.2012 அன்று  ஒரு விழா எடுத்து சிறப்பித்தது.  

மேலும் நாகசுந்தரம் அவர்களுக்கு நற்றமிழ் வித்தகர் என்ற விருதினை ஏஐஜி (பதிவுத் துறை) திரு ஈ.தருமன் அவர்கள் மூலம் வழங்கி கௌரவித்தது.

 நிகழ்ச்சியில் வங்கி இயக்குனர் த.கு.திவாகரன், திரு எம் சிவராமன் மற்றும் அண்ணா நகர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்  திரு த இராமலிங்கம்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

No comments:

Post a Comment

Annanagar Daily posts