Saturday 17 September 2016

அம்பத்தூரில் தமிழ்நாடு குறுந்தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கன்னடர்களை கண்டித்து ஆர்பாட்டம்

சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு குறுந்தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சங்க தலைவர் வி.நித்தியானந்தம் தலைமையில் கர்நாடக மாநிலத்தில் தமிழர்களை பாதுகாக்க கோரியும், காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை பெற்றிடவும். தமிழக வாகனங்களை எரித்தும், வாகன ஒட்டுனர்களை அடித்தும் வன்முறையில் ஈடுபட்ட கன்னடர்களை கண்டித்தும் ஆர்பாட்டம் நடைபெற்றது.  இதில் நிர்வாகிகள் சி.ஜனார்த்தனன், டி.மூர்த்தி, எஸ்.ஜெகன், ஆர்.வெங்கடேசன், டி.ஏழுமலை, என்.சுப்புராம், ஆர்.நடராஜன், இ.உமாசங்கர் எஸ்.கோபாலகிருஷ்ணன், ஏ.பாபு மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts